நடிகை தர்ஷா குப்தா உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. காரணம் என்ன?
பெண்களே... வீட்டின் முன்பு செடி வைக்கும் போது இதை கட்டாயம் தெரிந்துகோங்க..!வாஸ்து நம்பிக்கைகள்...!!!
வீட்டில் செடிகளை வளர்ப்பது சுற்றுச்சூழலுக்கு பசுமை சேர்ப்பதுடன், வீட்டின் அழகையும் அதிகரிக்கிறது. அதேவேளை, வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றுபவர்கள் செடிகளை வைக்கும் திசைக்கும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். குறிப்பாக தென்மேற்கு பகுதியான நைருதி மூலை, நிலைத்தன்மையுடன் தொடர்புடையதாக வாஸ்து நம்பிக்கைகளில் கூறப்படுகிறது.
தென்மேற்கு பகுதியில் உயரமான செடிகள்
வாஸ்து கருத்துகளின்படி, தென்மேற்கு திசையில் கனமான அல்லது உயரமாக வளரும் தாவரங்களை வைப்பது சாதகமானதாக கருதப்படுகிறது. பெரிய அளவில் வளரும் மரங்கள் அல்லது செடிகளை இந்தப் பகுதியில் வைத்தால் வீட்டில் நிலைத்தன்மை அதிகரிக்கும் என்றும், குடும்ப வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. இதனால் தென்மேற்கு திசை செடிகளை வைப்பதற்கு ஏற்ற இடமாக சிலர் கருதுகின்றனர்.
முள் செடிகள், வாடிய செடிகளை தவிர்க்கலாம்
செடியை தேர்வு செய்வதிலும் கவனம் தேவை என வாஸ்து குறிப்புகள் தெரிவிக்கின்றன. முள் நிறைந்த செடிகள் அல்லது வாடி உலர்ந்த நிலையில் இருக்கும் செடிகளை வீட்டின் இந்தப் பகுதியில் வைக்க வேண்டாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக செடிகள் ஆரோக்கியமாக வளர்வதை உறுதி செய்வது முக்கியம். வாடிய அல்லது இறந்த செடிகளை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக உள்ளது.
ஒளி, காற்றோட்டத்தையும் கவனிக்க வேண்டும்
தென்மேற்கு மூலையில் செடி வைக்க திட்டமிடுபவர்கள் அந்த இடத்தின் அளவு, கிடைக்கும் சூரிய ஒளி மற்றும் காற்றோட்டம் ஆகியவற்றை முதலில் கவனிக்கலாம். அதற்கேற்ற வீட்டு செடிகள் தேர்வு செய்யப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டால் வீட்டின் அழகும் சூழலும் மேம்படும். இருப்பினும், வாஸ்து தொடர்பான கருத்துகள் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல என்பதால், அவற்றை நம்பிக்கையின் அடிப்படையிலேயே அணுகுவது நல்லது.