இரவில் நைட்டியுடன் கடைக்கு சென்ற பெண்! சடலமாக வந்த பரிதாபம்! ஆதரவின்றி தவிக்கும் மகன்!

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்தவர் லீமா ரோஸ் என்ற 35 வயதுடைய பெண். இவர் நேற்று இரவு 8 மணியளவில் நைட்டியுடன் அருகில் இருக்கும் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அங்கு பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பி வந்துள்ளார்.
அப்போது தெரு ஓரத்தில் இருந்த மீன் கம்பத்திலிருந்து தீ பிடித்துள்ளது. அந்த தீ அவ்வழியாக வந்த லீமாவின் மீது விழுந்துள்ளது. உதவிக்கு நபர்கள் வருவதற்குள் லீமாவின் நைட்டியில் தீ பரவி உடல் முழுவதும் பரவியுள்ளது.
அதன் பிறகு அங்கு உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அனைத்துள்ளனர். லீமாவையும் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் லீமா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடந்தி வருகின்றனர். மேலும் ஆதரவின்றி தவிக்கும் அவரது மகனை பொலிசார் மனநல காப்பகத்தில் சேர்க்கவுள்ளனர்.