தமிழ் பண்பாட்டை காப்பாற்ற தமிழக அரசு அறிவித்த அறிவிப்பு!

தமிழ் பண்பாட்டை காப்பாற்ற தமிழக அரசு அறிவித்த அறிவிப்பு!



budget-for-tamil

இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது. 2019-20ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர் செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்தர். 

துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. 

budjet
தமிழ் பண்பாட்டை காப்பாற்ற அரசு உறுதியாக உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

-யுனெஸ்கோ தயாரித்துள்ள செல்வாக்குள்ள மொழி பட்டியலில் தமிழ் 14வது இடத்தில் உள்ளது

-இந்த பட்டியலில் தமிழை 10வது இடத்திற்கு கொண்டுவர முயற்சி எடுத்துள்ளோம்.

-பிற சர்வதேச பல்கலைக்கழகங்களிலும் தமிழ் இருக்கை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

-தமிழ் மொழி வளர்ச்சிக்காக நடப்பு பட்ஜெட்டில் ரூ.54.76 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.