தலைநிறைய பூவுடன் போஸ் கொடுத்திருக்கும் இந்த குழந்தை டாப் நடிகைகளில் ஒருவர்! யாருனு பாருங்க...
#Breaking: பயம் வந்திருச்சு.. திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - அண்ணாமலை பரபரப்பு கண்டனம்.!

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள கல்விக்கொள்கை மற்றும் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாட்டில் மாநில அரசாக இருக்கும் திமுக பல்வேறு பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. மும்மொழி கொள்கை தொடர்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. மேலும், மாநில பாஜக நிர்வாகிகள் சார்பில் மும்மொழி கொள்கை விஷயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு வியூகம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன் ஒருகட்டமாக இன்று மாநில அளவில் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் பாஜக சார்பில் நடத்தப்பட்டு வரும் நிலையில், தென்சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் கையெழுத்து வாங்க முற்பட்டார். அப்போது, அதிகாரிகள் உரிய அனுமதி இல்லை என கையெழுத்து இயக்கத்திற்கு அனுமதி மறுப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு இரண்டு மணிநேரத்திற்கு மேலாக தமிழிசை - காவல்துறையினர் இடையே வாக்குவாதம் நடந்து வருகிறது. காவல்துறையினர் தமிழிசை சௌந்தர்ராஜனை மட்டும் சுற்றிவளைத்து கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையும் படிங்க: "திருட்டையும் திமுகவையும் பிரிக்கவே முடியாது" - அண்ணாமலை குற்றசாட்டு...லீக்கான வீடியோ.!
அண்ணாமலை கண்டனம்
இந்நிலையில், இதுதொடர்பாக ட்விட் பதிவு செய்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை, "ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, பாஜக தமிழ்நாடு சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா திருமதி தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களைக் கைது செய்திருக்கிறது தமிழகக் காவல்துறை. அறுபது ஆண்டுகளாகத் தமிழ் மொழியை வியாபாரமாக்கி, தனியார் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கையை அனுமதிக்கும் திமுகவின் இரட்டை வேடம் இன்று அம்பலப்பட்டு நிற்கிறது.
திமுகவின் நாடகத்தைப் பொதுமக்கள் உணரத் தொடங்கி, மும்மொழிக் கொள்கைக்குப் பெருமளவில் ஆதரவளிப்பது கண்டு, பயத்தில் நிலை தடுமாறியிருக்கிறார் முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின். அதன் விளைவே, ஜனநாயக ரீதியாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தைத் தடுப்பதும், கைது செய்வதும். இந்தக் கைது பூச்சாண்டிக்கெல்லாம் தமிழக பாஜகவினர் பயந்து பின்வாங்கப்போவதில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வோம். எத்தனை பேரை உங்களால் சட்டவிரோதமாகக் கைது செய்ய முடியும் முதலமைச்சர் அவர்களே? தேசியக் கல்விக் கொள்கை, உங்கள் கட்சியில் இருக்கும் கடைக்கோடி தொண்டர்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியையும், பல மொழிகள் கற்கும் வாய்ப்பையும் அரசுப் பள்ளியில் இலவசமாக வழங்குகிறது. அதை ஏன் தடுக்கிறீர்கள்?" என தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய குழந்தைகளுக்கும், தரமான கல்வியும், விருப்பமான மொழிகளும் கற்கும் வாய்ப்பை வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையை ஆதரித்து, @BJP4Tamilnadu சார்பாக நடைபெறும் கையெழுத்து இயக்கத்தினை, சென்னையில் இன்று முன்னெடுத்துச் சென்ற தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநர், அக்கா…
— K.Annamalai (@annamalai_k) March 6, 2025
இதையும் படிங்க: #Breaking: What Bro?-வுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அளித்த பதில்.. திமுக அரசுக்கு கண்டனம்.!