"திருட்டையும் திமுகவையும் பிரிக்கவே முடியாது" - அண்ணாமலை குற்றசாட்டு...லீக்கான வீடியோ.!

மத்திய அரசு அமல்படுத்தி இருக்கும் மும்மொழி கொள்கையை, தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வருகிறது. திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் - பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.
மத்திய அரசுக்கு எதிராக திமுக மற்றும் அதன் அமைப்புகள் பல்வேறு போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில், திமுக சார்பில் ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது.
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது!
இந்தி எதிர்ப்புப் போர்வையில், வளையலைத் திருடும் குன்னூர் நகர்மன்ற 25-வது வார்டு திமுக கவுன்சிலர் திரு ஜாகிர் உசேன்.
— K.Annamalai (@annamalai_k) March 4, 2025
திருட்டையும் திமுகவையும் எப்போதும் பிரிக்கவே முடியாது! pic.twitter.com/1wQKadFcnY
இதையும் படிங்க: #Breaking: What Bro?-வுக்கு பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அளித்த பதில்.. திமுக அரசுக்கு கண்டனம்.!
அப்போது, குன்னூர் திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் என்பவர், பெண் ஒருவரின் கைகளை பிடித்து உயர்த்தியபடி சில செய்கை செய்தார். இதனை அவர் வளையலை திட்டுகிறார் என குற்றம் சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் பிறந்தநாள் இன்று.. பாஜக அண்ணாமலை, தவெக விஜய் வாழ்த்து.. விபரம் உள்ளே.!