#BREAKING: உருக்குலைந்த வெனிசுலா.. அதிபயங்கர நிலநடுக்கம்.. குலுங்கிய கட்டிடங்கள்.. அலறிய மக்கள்.!
நிலநடுக்கத்தை உணர்ந்ததும் பதறிப்போன மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
வீதிகளில் தஞ்சம்:
7.5 Magnitude Quake Jolts Venezuela: தென்னமெரிக்காவில் உள்ள வெனிசுலா நாட்டில் இன்று காலை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் பதறியபடி வீடுகளில் இருந்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதையும் படிங்க: நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து.. 90 பேர் பரிதாப பலி..! திடுக்கிடவைக்கும் சிசிடிவி காட்சிகள்.!
2 முறை:
இரண்டு முறை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவாகி இருக்கிறது. மோரோன் நகரில் இருந்து 13 மற்றும் 10 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீட்பு பணிகள் தீவிரம்:
முதல் முறை சுமார் 7.1 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கம், பின் 7.5 ரிக்டர் அளவாக மாறி இருக்கிறது. அடுத்தடுத்த நிலநடுக்கம் காரணமாக மக்களும் பதறிப்போயினர். பல இடங்களில் கட்டிடங்கள் சேதமாகி இருப்பதால் மீட்பு பணிகள் தொடர்கின்றன. உயிர்பலி அச்சமும் நிலவி வருகிறது.
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த கட்டிடம்:
Additional footage of the major damage in La Guaira, Venezuela from the powerful earthquakes. pic.twitter.com/TuWjpBblnF
— AZ Intel (@AZ_Intel_) June 25, 2026
கட்டிடத்தில் சிக்கி அலறிய மக்கள்:
🇻🇪🌍 USGS: Venezuela's devastating earthquake sequence has been identified as a "doublet event."
— WorldAxisIndia (@WorldAxisIndia) June 25, 2026
A magnitude 7.2 foreshock struck first, followed just 39 seconds later by a more powerful magnitude 7.5 mainshock, significantly increasing the destructive impact across affected… pic.twitter.com/Jzf7xc6YUw