முதல்வர் விஜய் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்! பரபரப்பு வீடியோ..!!!
சென்னை பெரம்பூர் வேதாந்தா முருகப்பா தெருவில் நீண்ட நாட்களாக தேங்கியுள்ள கழிவுநீரால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் தீர்வு கிடைக்காததால், அதிருப்தியடைந்த பகுதிவாசிகள் திடீரென திரண்டு வந்து எம்.எல்.ஏ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி போராட்டம்
பெரம்பூர் தொகுதியில் உள்ள வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் நீண்ட காலமாக தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் சுகாதார பாதிப்புகள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும், அடிப்படை வசதிகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... சட்டப்பேரவையில் திமுக திடீர் வெளிநடப்பு...! எ.வ. வேலு அறிவிப்பால் பரபரப்பு!!!
பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் தமிழக முதல்வராகவும் உள்ள விஜய்யின் புதிய தொகுதி அலுவலகம் சமீபத்தில் பெரம்பூரில் திறக்கப்பட்டது. அவரே நேரில் சென்று அலுவலகத்தை திறந்து வைத்திருந்த நிலையில், அதே அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டது கவனம் பெற்றுள்ளது.
பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு
தங்கள் பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீர் பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்ததாக பகுதிவாசிகள் கூறினர். ஆனால், நீண்ட நாட்களாகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் கைவிடப்பட்டது
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரச்சனை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று, கழிவுநீரை அகற்றி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.
இதையடுத்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். நீண்ட நாட்களாக நீடித்து வரும் கழிவுநீர் பிரச்சனைக்கு அதிகாரிகள் விரைந்து தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
#WATCH | சென்னை பெரம்பூர் MLA முதலமைச்சர் விஜயின் அலுவலகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்
வேதாந்தா முருகப்பா தெருவில் கழிவுநீர் செல்வதை சரிசெய்ய வலியுறுத்தி முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் சிவா பேச்சுவார்த்தை நடத்தினார். #SunNews… pic.twitter.com/68zte8aNhN
— Sun News (@sunnewstamil) August 17, 2026
இதையும் படிங்க: சற்று முன்.... தவெக ஆட்சி காகித கப்பல் போல் கவிழ்ந்து விடும்..! பேரவையில் சபாநாயகர் கூறிய நச் பதிலடி...!!!