பெரம்பூர் ரயில் நிலையத்தில்... வட மாநில வாலிபர் கஞ்சாவுடன் சிக்கினார்... கைது செய்த போலீசார்..!

பெரம்பூர் ரயில் நிலையத்தில்... வட மாநில வாலிபர் கஞ்சாவுடன் சிக்கினார்... கைது செய்த போலீசார்..!



At Perambur railway station... North state youth caught with ganja... Police arrested..

வட மாநிலத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தவரிடமிருந்து ரயில்வே காவல்துறையினர் 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சென்னை, பெரம்பூர் ரயில்வே காவல்துறையினர் நேற்று மாலை பெரம்பூர் ரயில் நிலையத்தில் இருக்கும் நடைமேடை இரண்டில் சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது தான்பூரிலிருந்து பெங்களூரூக்கு சென்னை வழியாக செல்லும் விரைவு ரயில் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்றது. 

அதில் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த ராஜு குமார் (23) என்பவர் ரயிலிலிருந்து இறங்கி சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்தார். காவல்துறையினர்
அவரை சோதனை செய்தனர். அப்போது அவரிடம் கஞ்சா இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசினார். இதை தொடர்ந்து அவர் பயணம் செய்த ரயில் பெட்டியை சோதனை செய்தபோது, அதில் பண்டல் பண்டலாக கஞ்சா இருந்தது.

ரயிலில் இருந்த கஞ்சாக்களை பறிமுதல் செய்த பெரம்பூர் ரயில்வே காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் கஞ்சாவை பீகாரில் இருந்து எடுத்து வந்து சென்னையில் கைமாற்றிவிட வந்ததாகவும் அப்போது மாட்டிக் கொண்டதாகவும் கூறினார். பத்து கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராஜூகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.