கஜா புயலுக்காக இதுவரை யாரும் செய்யாத உதவி!. ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானின் அறிவிப்பு!.

கஜா புயலுக்காக இதுவரை யாரும் செய்யாத உதவி!. ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மானின் அறிவிப்பு!.


Ar Rahman relief fund for Gaja strom

கஜா புயல் பாதிப்பால் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பலர் வீடுகளை இழந்து, விவசாய பயிர்கள், மரங்கள், ஆடு மாடுகள் ஆகியவற்றை இழந்து தவித்துவருகின்றனர்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் டெல்டா மாவட்டங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.



 

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நிவாரண உதவியை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், கனடா நாட்டில் டொரண்டோவில் டிசம்பர் 24-ஆம் தேதி, தான் நடத்தும் இசை நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதியை முழுமையாக கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்குவேன் என்று தெரிவித்துள்ளார்.