அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
நேரம் யாரை விட்டது.! இப்படி கூட விபத்து ஏற்படுமா.? சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
நேரம் யாரை விட்டது.! இப்படி கூட விபத்து ஏற்படுமா.? சேலத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த வெங்கடேஷ் மற்றும் சித்தராஜ் ஆகிய 2 பேர் நேற்று மாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனம் மூலமாக உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கொஞ்சம் கூட எதிர்பாராத விபத்து ஒன்று நடந்து பலத்த காயமடைந்து உயிருக்கு போராடும் நிலை ஏற்பட்டுள்ளது.
வெங்கடேஷ் மற்றும் சித்தராஜ் ஆகிய இருவரும் அரூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது சாலையோரம் இருந்த புளியமரத்தின் கிளை முறிந்து எதிர்பாராதவிதமாக அவர்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது விழுந்தது. வேகமாக வந்த இருசக்கர வாகனம் மீது மரக்கிளை விழுந்ததால் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளனர்.
இதில் வெங்கடேஷ், சித்தராஜ் ஆகிய இருவரும் பலத்த கட்டமடைந்து ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். என்னதான் நிதானமாக வாகனம் ஓட்டினாலும், இயற்கையான விபத்துக்கள் மனிதர்களை விடுவதில்லை என அப்பகுதி மக்கள் புலம்பியுள்ளனர்.