ஏ.சி வெடித்ததால் தீ விபத்து: புது மாப்பிள்ளை தீயில் கருகி பரிதாப உயிரிழப்பு..!

ஏ.சி வெடித்ததால் தீ விபத்து: புது மாப்பிள்ளை தீயில் கருகி பரிதாப உயிரிழப்பு..!



AC explosion caused fire youth died in fire accident

சென்னை, பெரம்பூர் அருகே  திரு.வி.க நகரில் உள்ள குமரன் நகர் காலனியை சேர்ந்தவர் பிரபாகர். இவரது மகன் ஷ்யாம். இவருக்கு திருமணம் நடந்து ஆறு மாதங்கள் முடிந்துள்ளது. இவரது மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு ஷ்யாம் தனது அறையை உள்பக்கமாக தாழிட்டு  கொண்டு தூங்கியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில், நேற்றிரவு ஷ்யாம் தூங்கிய அறையிலிருந்து  திடீரென புகை வந்துள்ளது. கூடவே அவரது அலறல் சத்தமும் கேட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தந்தை பிரபாகர், உடனடியாக கதவை உடைத்து அறைக்குள் சென்று பார்த்தபோது ஷ்யாம் தீக்காயங்களுடன் படுக்கையில் அலறி  துடித்துள்ளார் .

இதனையடுத்து உடனடியாக அவர் மீது தண்ணீர் ஊற்றி காப்பாற்ற முயற்சித்த நிலையில், அதற்கு முன்னதாகவே ஷ்யாம் படுக்கையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். அறையில் இயங்கிக் கொண்டிருந்த ஏ.சி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மின் கசிவு காரணமா ஏ.சி வெடித்திருக்க கூடுமா என்று குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திரு.வி.க நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.