இத யாரும் எதிர்பார்க்கலையே... இவங்களுக்கு மட்டும் தான் முக்கிய சீட்! அதிமுக உள்கட்சி விவகாரத்தில் எடப்பாடியின் அதிரடி அறிவிப்பு.!!!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய நிர்வாகிகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்களை நியமித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வெளியான இந்த அறிவிப்பு, அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மூத்த தலைவர்களுக்கு முக்கிய பொறுப்புகள்
புதிய அறிவிப்பின்படி, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன் மற்றும் எஸ்.பி. வேலுமணிக்கு கழக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், பி. தங்கமணி, கே.பி. அன்பழகன், காமராஜ், கே.சி. வீரமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளுக்கு அமைப்புச் செயலாளர் மற்றும் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மௌனம் சம்மதம்மா... மீண்டும் அதிமுகவில் இணைகிறாரா செந்தில் பாலாஜி? எடப்பாடி போட்ட கணக்கு அப்போ சரிதானா... அரசியல் களத்தில் புதிய விவாதம்..!!!
உள்கட்சி ஒற்றுமைக்கு முக்கியத்துவம்
கட்சிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறித்து ஆலோசித்து, மூத்த தலைவர்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த புதிய பொறுப்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி அமைப்பை அடிமட்டத்தில் இருந்து வலுப்படுத்தும் முயற்சியாகவும் இந்த மாற்றம் பார்க்கப்படுகிறது.
தேர்தலை நோக்கிய அரசியல் நகர்வு
புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் வெளியானதைத் தொடர்ந்து, அதிமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் அதனை பரவலாக பகிர்ந்து வருகின்றனர். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுக அமைப்பை பலப்படுத்தும் நடவடிக்கையாக எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எடப்பாடியின் திடீர் திருப்பம்... அதிமுகவின் துணை பொதுச்செயலாளர்களாக எஸ்பி வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!!!