புதுச்சேரியில் பயங்கரம்.. சாக்லேட் என நினைத்து எலிபேஸ்டை தின்ற குழந்தை... துடிதுடித்து பலியான சம்பவம்..!

புதுச்சேரியில் பயங்கரம்.. சாக்லேட் என நினைத்து எலிபேஸ்டை தின்ற குழந்தை... துடிதுடித்து பலியான சம்பவம்..!



A shocking incident in Puducherry.. A child who ate Elipaste thinking it was chocolate... died in a panic..!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுச்சாரம் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வருபவர்கள் தினேஷ்குமார் - மேரி தம்பதியினர். இவர்களுக்கு 3 வயதில் தியா என்று மகள் உள்ளார். சம்பவத்தன்று தியா வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருப்பதால் அதனை கட்டுப்படுத்துவதற்காக வைத்திருந்த எலி பேஸ்டை சாக்லேட் என்று நினைத்து தியா தின்றுள்ளார்.

இதனால் சிறிது நேரத்தில் தியாவிற்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்ட பெற்றோர் தியாவை மீட்டு உடனடியாக ராஜீவ் காந்தி குழந்தைகள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தியாவிற்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

puducherry

இதனைத்தொடர்ந்து தியாவிற்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று தியா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் இச்சம்பவம் குறித்து புதுச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.