நாடு முழுவதும் 75: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களுக்கு சீல்வைக்கப்படுகிறது?
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் 75 மாவட்டங்களின் எல்லைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் மூன்று மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு தொடர உத்தரவிட்டுள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி, உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதை அடுத்து, இந்தியா முழுவதும் இன்று ஒருநாள் சுய ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
Chennai, Erode and Kanchipuram in the list of 75 districts which are to go under lockdown. #StayHomeStaySafe #TN_Together_AgainstCorona pic.twitter.com/sT9CVnimWH
— AIADMK (@AIADMKOfficial) March 22, 2020
இந்தியாவில் உத்திரபிரதேசம், மராட்டியம், மேற்கு வங்கம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் நாட்டின் முக்கிய நகரங்களின் எல்லைகள் தனித்தீவு போல் சீல் வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தமிழகத்தில் ஈரோடு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு மார்ச் 31 வரை ஊரடங்கு தொடர உத்தரவிட்டுள்ளது.