தமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள்!! ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ!!
தமிழக அரசு எடுத்துள்ள 6 முக்கிய முடிவுகள்!! ஊரடங்கு தொடங்கி, ஆக்சிஜன் பிரச்சனைவரை எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இதோ!!
முதல்வர் தலைமையில் 33 அமைச்சர்கள் கலந்து கொண்ட முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடந்தது. அதில் தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழலை கையாள்வது மற்றும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து 6 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியல் இதோ.
1. தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.
2. அரசு, தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கப்படும்.
3. மருத்துவ ஆக்சிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
4. எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்சிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது.
5. ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
6. அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.