ஆபாச படம் பார்ப்பவர்கள், 3000 ஐபி முகவரி, அடுத்த பட்டியல் தயார்! 10 ஆண்டுகள் சிறை!



3000 IP address found who watching videos

சென்னையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியான எத்திராஜ் கல்லூரியில் விழா ஒன்றில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ரவி பங்கேற்று பேசினார். விழாவில் பேசிய அவர் பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என்றும், ஆபத்தாக உணரும் சமயங்களில் காவலன் செயலியை பயன்படுத்தலாம் எனவும் கூறியுள்ளார்.

மேலும், உயிருக்கு ஆபத்து நேரக்கூடிய சூழலில் பெண்கள் கொலை கூட செய்யலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகள் ஆபாச படம் தொடர்பாக இதுவரை மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற படங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்தினால் 10 ஆண்டு சிறை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Crime

மேலும் , தற்போது வரை நடத்தப்பட்ட விசாரணையில் இதுவரை 3000 ஐபி முகவரியில் இருந்து குழந்தைகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் தமிழகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவை எந்த  எந்த மாவட்டங்கள் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருவதாகவும் கூறியுள்ளார்.

சென்னையில் ஏற்கனவே இரண்டு கட்டமாக சுமார் 75 ஐபி முகவரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலும் அடுத்து ஒரு லிஸ்ட் தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.