#JustIN: இராமநாதபுரம், தஞ்சாவூர் உட்பட 8 மாவாட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வெளுத்து வாங்கப்போகும் மழை.!

#JustIN: இராமநாதபுரம், தஞ்சாவூர் உட்பட 8 மாவாட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வெளுத்து வாங்கப்போகும் மழை.!



19-dec-2023-rain-update-tamilnadu


சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சியானது, இன்று இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது. 

இதனால், இன்று (நவம்பர் 19) தெந்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

20 மற்றும் 21ம் தேதியில் தெந்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

tamilnadu

தலைநகர் சென்னையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலையாக 31 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 23 டிகிரி செல்சியஸும் பதிவாகலாம்.

மீனவர்கள் இன்று முதல் 21ம் தேதி வரையில் தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். இன்று மட்டும் அரபிக்கடலில் இலட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடலுக்கும் செல்ல வேண்டாம். இப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கி.மீ வேகம் வரை வீசலாம்" என தெரிவிக்கப்பட்டது.  

இந்நிலையில், இரவு 07:00 மணி வரையில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.