உடல் பருமனை கேலி செய்ததால் ஆத்திரம்.. நண்பனை கொலை செய்த நட்பு.. நடந்த பயங்கரம்.!
உடல் பருமனை கேலி செய்ததால் ஆத்திரம்.. நண்பனை கொலை செய்த நட்பு.. நடந்த பயங்கரம்.!
பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவன் பிடிபட்டுள்ளான்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே கீரனூர் கிராமத்தில் வசித்து வந்தவர் கோகுல். இவர் தனியார் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் நிலையில், நேற்று முன்தினம் இரவு கோகுலுடன் படிக்கும் மாணவன், அவரை பிறந்த நாள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாக கூறி 7 மணிக்கு அழைத்து சென்றுள்ளார்.
ஆனால், இரவு முழுவதும் கோகுல் வீடு திரும்பாமல் இருந்த நிலையில், சந்தப்பேட்டை புறவழி சாலையில் நேற்று காலை பள்ளி மாணவன் ஒருவர் கை மற்றும் கழுத்து பகுதிகளில் வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் பேரில் உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில், உயிரிழந்தவர் கீரனூர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் கோகுல் என தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து அவரை பிறந்தநாள் விழாவுக்கு அழைத்து சென்ற நண்பனை காவல்துறையினர் விசாரித்த நிலையில், "கோகுலை தான் கொலை செய்தேன்" என அவர் ஒப்புக்கொண்டார்.
மேலும், 'தான் பருமனாக இருப்பதை, கோகுல் அடிக்கடி கேலி செய்ததாகவும், அதனை தாங்க முடியாமல் ஆவேசமடைந்து கொலை செய்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்'.