மாயமா? மந்திரமா? 3 மாதங்களாக ஒரே இடத்தில் நிற்கும் ஆடு! அருகில் சென்றால் மறைந்துவிடுமா? பக்தர்களை பரவசப்படுத்தும் ஆன்மீக அதிசய காட்சி...!!!



himachal-jogni-mata-temple-mysterious-goat

இமாச்சலப் பிரதேசத்தின் ஜிரி பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜோக்னி மாதா கோயிலில், கடந்த 3 மாதங்களாக தினமும் வந்து செல்லும் ஆடு ஒன்று பக்தர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மாலை 7 மணியளவில் கோயில் வளாகத்துக்கு வரும் அந்த ஆடு, அதிகாலை 5 மணி வரை அங்கேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் வழக்கமான நடமாட்டம் மட்டுமின்றி, அதை அணுகும்போது திடீரென மறைந்துவிடுவதாகச் சொல்லப்படும் தகவலும் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

மாலை வந்தால் கோயிலிலேயே இரவு முழுவதும் தங்கும் ஆடு

ஜிரி பகுதியில் உள்ள ஜோக்னி மாதா கோயில் வளாகத்துக்கு தினமும் மாலை நேரத்தில் இந்த ஆடு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர். கோயிலைச் சுற்றி சிறிது நேரம் நடமாடும் அது, இரவு முழுவதும் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் அதிகாலை 5 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டுச் செல்கிறது. தொடர்ந்து ஒரே நேரத்தில் வந்து செல்லும் அதன் பழக்கம், கோயிலுக்கு வரும் பக்தர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: தினமும் பள்ளிக்கு குடிபோதையில் வரும் ஹெட் மாஸ்டர்! மலம் கழித்துவிட்டு 3-ஆம் வகுப்பு மாணவனை அள்ள சொன்ன கொடூரம்! அடுக்கடுக்கான புகார்களை சொல்லி கதறும் பெற்றோர்கள் ..!!!

ஆடு என்ன உணவு உட்கொள்கிறது என்பதிலும் அப்பகுதி மக்களிடம் ஒரே கருத்து இல்லை. சிலர், இரவு நேரத்தில் கோயிலுக்கு வெளியே சென்று புல் மற்றும் தீவனங்களை சாப்பிட்டுவிட்டு மீண்டும் திரும்புவதாகக் கூறுகின்றனர். ஆனால், வேறு சிலர் அது புல் உள்ளிட்ட எந்த உணவையும் சாப்பிடுவதில்லை என தெரிவிக்கின்றனர். இதனால் அதன் அன்றாட நடவடிக்கைகளை கவனிக்க பலரும் கோயிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

அருகில் சென்றால் மறைந்துவிடுகிறதா?

இதற்கிடையே, இந்த ஆடு தொடர்பாக உள்ளூர்வாசிகள் கூறும் மற்றொரு தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இருந்து ஆட்டை தெளிவாகப் பார்க்க முடிந்தாலும், அதை பிடிக்கவோ அருகில் சென்று பார்க்கவோ முயற்சிக்கும் போது, கண் இமைக்கும் நேரத்தில் அது காணாமல் போய்விடுவதாகக் கூறப்படுகிறது. இதை நேரில் பார்த்ததாக சிலர் தெரிவிப்பதால், ஆட்டின் நடத்தை குறித்து மேலும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

பக்தர்களிடையே ஆன்மீக நம்பிக்கை

ஆட்டின் வழக்கமான வருகை, அதன் உணவுப் பழக்கம் குறித்த மாறுபட்ட தகவல்கள் மற்றும் அருகில் சென்றால் மறைந்துவிடும் என்ற உள்ளூர் மக்களின் கூற்றுகள் ஆகியவை சேர்ந்து தற்போது பல்வேறு பேச்சுகளுக்கு வழிவகுத்துள்ளன. சில பக்தர்கள் இதை ஜோக்னி மாதா கோயில் தொடர்பான ஆன்மீக அடையாளமாகவும், அம்மனின் அருள் வடிவமாகவும் நம்புகின்றனர். உறுதியான விளக்கம் இல்லாத நிலையில், மர்ம ஆடு தற்போது அந்தப் பகுதியின் முக்கிய ஈர்ப்பாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: சைக்கோவை காதலித்ததால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கை-கால்கள் கட்டி எரித்துக்கொலை.!