இந்திய அணி வெற்றிபெறுவதற்கு சேவாக் கூறும் அட்வைஸ்!.

இந்திய அணி வெற்றிபெறுவதற்கு சேவாக் கூறும் அட்வைஸ்!.



sehwag advised to indian cricket team for won england


இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட விராட் கோலியின் தலைமையிலான இந்திய அணி, மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை அபாரமாக வென்றது, இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில்  ஒரு மாற்றமும் இல்லாமல், கடைசி ஆட்டத்தை போலவே அப்படியே விளையாட வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளார்.                                     Virat Kohli 

இந்தியா-இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றதால், விராட் கோலி தலைமையிலான அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெறுவதை இலக்காக கொண்டு ஆடியதால் இந்திய அணி எளிதாக வெற்றிபெற முடிந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக், நான்காவது போட்டிக்கான இந்திய அணியில் மாற்றங்கள் செய்யக்கூடாது ஆனால் விராட் கோலி சற்று கவனமாக ஆடவேண்டும் ஏனென்றால் அவரிடம் மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கும்.

          Virat Kohli

மூன்றாவது போட்டியில் ஆடிய இந்திய அணி வலுவாக உள்ளது. தொடக்க வீரர்கள் மற்றும் நடுவில் இறங்கும் மட்டையாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர்.

அதேபோல் பந்து வீச்சும் சிறப்பாக உள்ளது. நமது அணி வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டிருக்கிறோம். அஷ்வினும் நல்ல பார்மில் உள்ளார். எனவே அதே அணியுடன் நான்காவது போட்டியில் நன்கு ஆடலாம் என சேவாக் கூறியுள்ளார்.