பிறந்தநாள் தினத்தன்று சச்சின் என்ன சொல்லியுள்ளார் பார்த்தீர்களா.? இது தான் தேசப்பற்று.!
பிறந்தநாள் தினத்தன்று சச்சின் என்ன சொல்லியுள்ளார் பார்த்தீர்களா.? இது தான் தேசப்பற்று.!
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவித்து வருவது வழக்கம். இந்தியாவுக்காக 24 ஆண்டுகள் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றவர். உலகளவிலும் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர் சச்சின் மட்டுமே. டெஸ்ட் போட்டிகளில் 15921 ரன்களை குவித்து அசைக்க முடியாத சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார்.
தனது பிறந்தநாளுக்காக சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், உங்களின் அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் இந்த நாளை மேலும் சிறப்பாக்கியது. அதற்கு எப்போதும் உண்மையுள்ளவனாக இருப்பேன். கடந்த மாதம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் அறிவுறைப்படி நான் 21 நாள்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.
Thank you everyone for your warm wishes. It's made my day special. I am very grateful indeed.
— Sachin Tendulkar (@sachin_rt) April 24, 2021
Take care and stay safe. pic.twitter.com/SwWYPNU73q
கொரோனாவில் இருந்து மீண்டு வர மருத்துவர்கள் எனக்கு மிகப்பெரிய உதவியாய் இருந்தார்கள். உங்களின் பிரார்த்தனைகளும் எனக்கு துணையாக இருந்தது. கடந்தாண்டு நான் பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தை தொடக்கி வைத்தேன். இந்நேரத்தில் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்யுங்கள். அது தேவைப்படும் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும். எனவே பிளாஸ்மா தானம் செய்யுங்கள். நானும் செய்ய இருக்கிறேன் என சச்சின் சச்சின் தெரிவித்துள்ளார்.