கம்பேக் கொடுத்த நம்ம சேலத்து நடராஜன்..! மேலும் இரண்டு தமிழக வீரர்களை களமிறக்கும் விராட் கோலி..!

கம்பேக் கொடுத்த நம்ம சேலத்து நடராஜன்..! மேலும் இரண்டு தமிழக வீரர்களை களமிறக்கும் விராட் கோலி..!



natarajan-in-t20-match

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

இந்தநிலையில் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது. டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்காத நடராஜனுக்கு டி-20 தொடரில் இடம் கிடைத்துள்ளது. இந்தத் தொடரில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது.

natarajan

இதில் வருண் சக்ரவர்த்தி, சூர்யகுமார் யாதவ், ராகுல் திவாட்டியா, இஷான் கிஷன் உள்ளிட்டோர் அறிமுக வீரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அனுபவ வீரர் புவனேஷ்வர் குமாரும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இந்திய அணி:

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹார்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), யுஸ்வேந்திர சஹால், வருண் சக்ரவர்த்தி, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவாட்டியா, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்குர்.