ஐயோ... கடவுளே! வெள்ளத்தில் சிக்கி 8 மணி நேரம் தவித்த பள்ளி குழந்தைகள்! கலங்க வைக்கும் காட்சிகள்...!!!



gurugram-rain-school-buses-flood

குருகிராமில் திங்கள்கிழமை பெய்த கனமழை நகரின் இயல்பு வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப்போட்டது. முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியதால் வாகனப் போக்குவரத்து முடங்கியது. சுபாஷ் சவுக் பகுதியில் பள்ளிப் பேருந்துகள் ஆழமான நீரில் சிக்கின. பேருந்துகளில் இருந்த மாணவர்கள் பல மணி நேரம் வெளியேற முடியாமல் தவித்தனர்.

வெள்ளத்தில் சிக்கிய பள்ளிப் பேருந்துகள்

வழக்கம்போல் பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்துகள், சுபாஷ் சவுக் பகுதியில் தேங்கியிருந்த வெள்ளநீரில் சிக்கிக் கொண்டன. நீர்மட்டம் உயர்ந்ததால் பேருந்துகளை தொடர்ந்து இயக்க முடியவில்லை. நிலைமை மோசமான நிலையில், சில பேருந்துகளின் ஓட்டுநர்களும் உதவியாளர்களும் மேல்தளத்தில் ஏறி நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அங்கிருந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதையும் படிங்க: நள்ளிரவு 1 மணிக்கு ஓடும் ரயிலில் நடந்த கொடுமை! குழந்தைங்க இருக்காங்கன்னு சொல்லியும் கேட்கல.... தகவல் கொடுத்தும் போலீஸ் வரல! வீடியோ வெளியிட்டு கொந்தளித்த பெண் பயணி..!!!

8 மணி நேரம் கழித்து வீடு திரும்பிய மாணவர்

காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை சுமார் 75 மி.மீ. மழை பதிவானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மதியம் 1 மணி முதல் 3 மணி வரை பெய்த கனமழைதான் பல பகுதிகளில் திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் தாக்கம் பள்ளி மாணவர்களின் பயணத்திலும் எதிரொலித்தது. செக்டார் 47-ல் மதியம் 12.30 மணியளவில் புறப்பட்ட இரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு இரவு 8.30 மணிக்குத்தான் வீடு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுபாஷ் சவுக் மட்டுமல்லாமல் ராஜீவ் சவுக், இஃப்கோ சவுக், உத்யோக் விஹார் உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி பேருந்துகள் நீண்ட நேரம் சிக்கியதால் பெற்றோர்கள் பதற்றமடைந்தனர். அதிக கட்டணம் வசூலிக்கும் சர்வதேச தர பள்ளிகள் மற்றும் ஆடம்பர குடியிருப்புகள் நிறைந்த நகரத்தில், அடிப்படை வடிகால் வசதிகள் ஏன் போதுமானதாக இல்லை என பலரும் கேள்வி எழுப்பினர்.

ஆன்லைன் வகுப்புக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

தொடர்ந்து மழை பெய்யும் சூழலை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 25-ம் தேதி பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரியும் வாய்ப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் வாகன நெரிசலை ஓரளவு குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு மழைக்காலத்திலும் இதேபோன்ற நீர்த்தேக்கம் ஏற்படுவதாகக் கூறி, பள்ளி மாணவர்களுக்கு தனியாக மழைக்கால விடுமுறை வழங்க வேண்டும் என குருகிராம் பெற்றோர் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள், உயரமான கட்டிடங்கள், ஆடம்பர குடியிருப்புகள் என நவீன நகரத்தின் அடையாளங்களைக் கொண்ட குருகிராமில், மழை வெள்ளம் மீண்டும் உள்கட்டமைப்பு குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

 

இதையும் படிங்க: ஐயோ... தலைசுற்றி தடுமாறும் போது யாருமே பார்க்கலயே...! கொதிக்கும் வெல்ல ஆலையில் நிலைதடுமாறி விழுந்த இளம் தொழிலாளி பரிதாப பலி! நடுங்க வைக்கும் காட்சி...!!!