ஐயோ... தலைசுற்றி தடுமாறும் போது யாருமே பார்க்கலயே...! கொதிக்கும் வெல்ல ஆலையில் நிலைதடுமாறி விழுந்த இளம் தொழிலாளி பரிதாப பலி! நடுங்க வைக்கும் காட்சி...!!!
மகாராஷ்டிராவில் உள்ள வெல்ல ஆலையில் நடந்த சோக விபத்தில் லக்கிம்பூரைச் சேர்ந்த இளம் தொழிலாளி டேனிஷ் உயிரிழந்தார். வேலை செய்து கொண்டிருந்தபோது நிலைதடுமாறி கொதிக்கும் வெல்லப் பாத்திரத்தில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. சக தொழிலாளர்கள் அவரை மீட்க முயன்றும் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலை செய்யும்போது நேர்ந்த விபரீதம்
மகாராஷ்டிராவில் உள்ள வெல்ல ஆலையில் டேனிஷ் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் தலை சுற்றி நிலைதடுமாறி கொதிக்கும் வெல்லம் இருந்த பாத்திரத்துக்குள் விழுந்துள்ளார். உடனடியாக அங்கிருந்த தொழிலாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
சிரமத்துக்கு இடையே மீட்ட சக தொழிலாளர்கள்
கொதிக்கும் வெல்லம் காரணமாக மீட்புப் பணி மிகவும் கடினமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் சக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து டேனிஷை பாத்திரத்திலிருந்து வெளியே கொண்டுவந்தனர். ஆனால், அவர் உயிரிழந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுடன் மகாராஷ்டிரா சென்றவர்
லக்கிம்பூரில் இருந்து வேலை தேடி மகாராஷ்டிராவுக்குச் சென்ற 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களில் டேனிஷும் ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆலையில் நடந்த வெல்ல ஆலை விபத்து தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தக் காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
'गुड़ प्लांट के कढ़ाव में गिरकर युवक की दर्दनाक मौत'
— Raju Sharma journalist (@RajuSharmajour1) August 24, 2026
महाराष्ट्र के एक गुड़ प्लांट के कढ़ाव में गिरकर लखीमपुर के दानिश की दर्दनाक मौत हो गई. दानिश का गुड़ प्लांट में काम के दौरान अचानक संतुलन बिगड़ गया और वह कढ़ाव में गिर गया. बामुश्किल साथियों ने उसे बहार निकलना. दानिश 15… pic.twitter.com/Ioy1ngfoRv
இதையும் படிங்க: நொடியில் நடந்த பயங்கரம்! இளம்பெண்ணுக்கு தோழனே செய்த துரோகம்! நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!!