மும்பையில் வாங்கிய அடிக்கு சென்னையில் பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே; ரசிகர்கள் எதிர்பார்பு.!
மும்பையில் வாங்கிய அடிக்கு சென்னையில் பதிலடி கொடுக்குமா சிஎஸ்கே; ரசிகர்கள் எதிர்பார்பு.!
ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 43 போட்டிகள் இதுவரை முடிவு பெற்றுள்ள நிலையில் நடப்பு சாம்பியான சென்னை அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் டெல்லி அணி இரண்டாவது இடத்திலும் உள்ளது.
இன்று 44ஆவது லீக் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் மும்பை இந்தியன்ஸுக்கும் இடையே சென்னையில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் சீசன் துவக்கத்தில்
இருந்தே தொடர் வெற்றிகளை குவித்த சென்னை அணி முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
ஆனால் கடைசி கட்டங்களில் விளையாடிய இரண்டு மூன்று போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்ததன் மூலம் முதலிடத்தை இழந்து இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதில் மும்பை அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியும் ஒன்று.
அதன் பிறகு சென்னையில் நடந்த 41வது லீக் போட்டியில் சென்னை அணி, ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இதனால் சொந்த மண்ணில் இன்று நடக்கும் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி மும்பையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் சென்னை ரசிகர்கள் உள்ளார்கள். இதுவரை சொந்த மண்ணில் பங்கேற்ற எல்லா போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள சென்னை அணி, சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது.
அதேவேளையில் ஐபிஎல் வரலாற்றில் சென்னை அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக மும்பை அணி விளங்குகிறது. இதுவரை இரு அணிகளும் 25 முறை மோதியுள்ளது. அதில் மும்பை அணி அதிகபட்சமாக 14 முறை வென்றுள்ளது. சென்னை அணி 11 முறை வென்றுள்ளது.
இன்றைய போட்டியில் மும்பை அணி வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். இதனால் இன்றைய போட்டியானது மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.