ஒரே நாளில் 334 ரன்கள்.. அசுர பலத்துடன் பாக்கிஸ்தானை பந்தாடும் இங்கிலாந்து!

ஒரே நாளில் 334 ரன்கள்.. அசுர பலத்துடன் பாக்கிஸ்தானை பந்தாடும் இங்கிலாந்து!



England top on first day of 3rd test

சௌதாம்ப்டனில் நேற்று துவங்கிய பாக்கிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து - பாக்கிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நேற்று  துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

Eng vs pak 3rd test

துவக்க ஆட்டக்காரர் பர்ன்ஸ் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சாக் க்ராலே நங்கூரமாய் நின்று விளையாட துவங்கினார். இங்கிலாந்து அணியின் சிப்லே(22), ரூட்(29), போப்(3) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 127 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து அணி.

பின்னர் 5 ஆவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த க்ராலே மற்றும் பட்லர் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். க்ராலே தனது முதல் சதத்தினை விளாசினார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. க்ராலே 171, பட்லர் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.