நோட் பண்ணிக்கோங்க பெண்களே ! இந்த துறையில் வேலை செய்யும் ஆண்கள்தான் மனைவிக்கு துரோகம் செய்ய வாய்ப்புள்ளதாம்..! முழு விபரம் உள்ளே....

இன்று குறுக்கு வழிகளில் பணம் சம்பாதிப்பது என்பது பலருக்கும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. குறிப்பாக, தொழில்நுட்ப வளர்ச்சி அனைவருக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த டிஜிட்டல் யுகத்தில், பலர் தொழில்நுட்பத்தை ஒரு வருமானம் ஈட்டும் கருவியாக மாற்றி பல விதமான புது வழிகளில் பணம் சம்பாதிக்கின்றனர்.
இத்தனை எல்லைகளையும் தாண்டி, ஒருவரின் தொழில் என்றே துரோகம் செய்யும் ஆண்களை பிடிப்பது என்றால் நம்மால் நம்ப முடியுமா? ஆம், மேட்லைன் ஸ்மித் என்ற இளம் பெண் இதை தன் வாழ்க்கை வழியிலேயே செய்துவருகிறார்.
துரோகத்தைக் கண்காணிக்கும் தனி தொழில்!
மேட்லைன் ஸ்மித், ஒரு "பிரொஃபஷனல் ஏமாற்றுக்காரரை" பிடிக்கும் நிபுணராக சமூக ஊடகங்களில் பிரபலமானவர். கடந்த மூன்று ஆண்டுகளில், 5,000-க்கும் அதிகமான சோதனைகளை நடத்தி, நூற்றுக்கணக்கான ஆண்களை கையும் களவுமாக பிடித்துள்ளார்.
அவர் சேவையை நாடுபவர்கள் பெரும்பாலும் தங்கள் கணவர் அல்லது காதலரின் நடத்தையில் சந்தேகம் கொண்ட பெண்கள்தான். $65 (சுமார் ரூ.5614) என்ற கட்டணத்திற்கு, மேட்லைன், அந்த ஆண்களுடன் சமூக ஊடகங்களில் தொடர்பு கொண்டு அவர்களது பதில்களை ஸ்கிரீன் ஷாட்களாகப் பெற்றுத் தருகிறார்.
ஏமாற்றுகிற ஆண்கள் – யார் அதிகம்?
அதிகமோசடி செய்பவர்கள் யார் எனும் கேள்விக்கு, மேட்லைன் கூறுவதாவது – காவல்துறையில் பணியாற்றும் ஆண்கள் அதிகமாக துரோகம் செய்பவர்கள். இவர்களுக்கு பின்பாக தீயணைப்பு வீரர்கள், துணை மருத்துவர்கள், ராணுவ வீரர்கள், உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வருகிறார்கள். மருத்துவர்கள் இந்த பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தங்களது உடலை வலிமையாக காட்டும் புகைப்படங்களை அல்லது தனியாகவும், விடுமுறைகளில் எடுத்த புகைப்படங்களை பதிவிடும் ஆண்களும் அதிக வாய்ப்பில் துரோகிகள் என மேட்லைன் கருதுகிறார்.
தொழில்நுட்பமும் துரோகமும்
தொழில்நுட்பம் இவ்வளவு முன்னேறிய நிலையில், இது போல ஒரு சேவையும் வளர்ந்து வருவது ஆச்சரியமல்ல. ஆனால் அதே நேரத்தில், இது வாழ்க்கையின் மறைமுக சாயலைவும் வெளிக்கொணர்கிறது – நம்பிக்கையின் முக்கியத்துவம், உறவுகளின் ஆழம் மற்றும் மனித நடத்தை.