BREAKING : விசிகவிலிருந்து மாநில செயலாளர் சங்கதமிழன் திடீர் சஸ்பென்ட்.! அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட கட்சி தலைமை!!!
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநில செயலாளரான சங்கத்தமிழன், கட்சி ஒழுங்குமுறையை மீறியதாகக் கூறி 3 மாதங்களுக்கு தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
கட்சியின் உள்விவகாரங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து தொடர்ந்து பொதுவெளியிலும் சமூக ஊடகங்களிலும் பேசி வந்ததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அதிமுகவின் அனைத்து பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்த முக்கிய புள்ளி! நிலைமை ரொம்ப மோசமா போகுது... அதிர்ச்சியில் எடப்பாடி..!!!
பொதுவெளியில் கருத்து தெரிவித்ததாக குற்றச்சாட்டு
விசிக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சிக்குள் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்து சங்கத்தமிழன் தொடர்ந்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது செயல்பாடுகள் கட்சித் தலைமைக்கு தேவையற்ற நெருக்கடியையும் தர்மசங்கடத்தையும் ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை ஏன்?
கட்சியின் கட்டுக்கோப்பை பாதிக்கும் வகையிலும், தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாகவும் செயல்பட்டதாகக் கூறி இந்த ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவரை 3 மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்குவதாக கட்சி அறிவித்துள்ளது.
கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை
சஸ்பெண்ட் காலத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெறும் எந்த நிகழ்ச்சியிலும் சங்கத்தமிழன் பங்கேற்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கட்சியின் பெயர், பதவி அல்லது பொறுப்பை எந்த வகையிலும் பயன்படுத்தக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் யாரும் அவருடன் கட்சி சார்ந்த தொடர்புகளை வைத்துக்கொள்ளக் கூடாது என விசிக தலைமை தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: #சற்றுமுன் : அண்ணாமலையின் புதிய கட்சியில் இணையும் முக்கிய புள்ளி....! பாஜக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு...!!!