ஏன்? என்னாச்சு? தவெகவில் இருந்து அடுத்தடுத்து விலகல்..! CM விஜய் போட்ட அவசர உத்தரவு..!!!
தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மைக் காலமாக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அரசியல் அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே முக்கிய பொறுப்பில் இருந்தவர்கள் வெளியேறியிருப்பது, கட்சி தலைமையிடம் புதிய சவாலாக உருவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
10 நாட்களில் அதிரடி முடிவு
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவிந்தசாமி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த வெறும் 10 நாட்களிலேயே அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது திடீர் முடிவு குறித்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்த நிலையில், கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறதா என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுகவில் அடுத்தக்கட்ட பரபரப்பு... சி.வி.சண்முகத்தின் ரகசிய 1000 கையெழுத்து பிளான்! அடுத்ததாக எடப்பாடியின் " பிளான் B" மூவ்..!!!
வழக்கறிஞர் பிரிவினரின் வெளியேற்றம்
அந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று கட்சியின் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த சிலர் தமிழக வெற்றிக் கழகத்திலிருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைந்தனர். இந்த நடவடிக்கை, சமீபத்திய தொடர் விலகல்கள் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
காரணங்களை ஆராய விஜய் உத்தரவு
தகவலின்படி, தொடர்ச்சியாக நிகழும் விலகல்களின் பின்னணி என்ன, நிர்வாகிகள் மத்தியில் ஏதேனும் அதிருப்தி உள்ளதா என்பதைக் கண்டறிய கட்சி தலைமையகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதையடுத்து, கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய், மூத்த நிர்வாகிகளிடம் விரிவான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: BREAKING: திடீரென ஒட்டுமொத்த அரசியலில் இருந்தும் விலகிய தவெகவின் முக்கிய புள்ளி..! அதிர்ச்சியில் CM விஜய்..!!!