BREAKING: அதிமுகவிலிருந்து மேலும் 5 எம்.எல். ஏக்கள் தவெக பக்கம் தாவல்? இறுதிகட்டத்தை எட்டியது.... செம ஷாக்கில் எடப்பாடி!!!



tvk-aiadmk-5-mlas-talks-final-stage

தமிழக சட்டமன்றத்தில் தனது பலத்தை அதிகரிக்க தமிழக வெற்றிக் கழகம் தீவிரமாக காய்களை நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த மேலும் 5 எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ள நிலையில், சட்டமன்றத்தில் சொந்த பலத்தை வலுப்படுத்தும் முயற்சியில் தவெக தலைமை கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது.

அதிமுகவில் இருந்து தொடரும் விலகல்கள்

சமீபத்தில் அதிமுகவைச் சேர்ந்த சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், டி. ஜெயக்குமார், இசக்கி சுப்பையா, சத்யபாமா, மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு துணைப் பொதுச்செயலாளர், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கட்டுக்கட்டாக களையும் அதிமுக கோட்டை! அடுத்த 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக பக்கம் தாவ தயார்? இனி சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாத நிலை... செங்கோட்டையனின் பரபரப்பு பேட்டி...!!!

எம்.எல்.ஏ. பதவியை முதலில் ராஜினாமா செய்துவிட்டு கட்சியில் இணைந்ததால், கட்சித் தாவல் தடைச் சட்டம் தொடர்பான நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்படாத வகையில் அவர்கள் நகர்ந்ததாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சில எம்.எல்.ஏ.க்களிடமும் மாற்றத்துக்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் 5 எம்.எல்.ஏ.க்களுடன் பேச்சுவார்த்தை

இந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த மேலும் 5 சட்டமன்ற உறுப்பினர்களுடன் தவெக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் தனித்தொகுதிகளைச் சேர்ந்த இரு எம்.எல்.ஏ.க்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே தொகுதிகளில் களப்பணிகளைத் தொடங்க வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டணி பலத்தை நம்பாமல் சொந்த பலம்?

ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இடதுசாரிகள் மற்றும் விசிகவுடன் கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் உருவாகியுள்ளதாக கூறப்படும் சூழலில், கூட்டணி ஆதரவை மட்டும் சார்ந்திருக்காமல் சட்டமன்றத்தில் தனது எண்ணிக்கையை உயர்த்துவது தவெகவின் முக்கிய நோக்கமாக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வரும் இடைத்தேர்தல்களில் நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெறுவதன் மூலம் கட்சியின் சட்டமன்ற பலத்தை மேலும் அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

 

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்... அதிமுக- விலிருந்து விலகிய முக்கிய புள்ளி! அடுத்த அதிர்ச்சியில் எடப்பாடி...!!!