என்ன நடக்குது...! அதிமுக - திமுக நெருக்கம்மா? ஒரே போனில் மாறி மாறி பேசிய எம்.எல்.ஏக்கள்...!!!



tn-assembly-2026-dmk-aiadmk-phone-video

2026-27 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டமன்றத்தில் துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பேரவை கூடியது. அப்போது அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியும், திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவும் ஒன்றாக நடந்து வந்த காட்சி கவனம் பெற்றது.

அப்போது செல்போனில் பேசிக்கொண்டிருந்த அக்ரி கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து போனை சேகர்பாபு வாங்கினார். பின்னர் அவர் அதே செல்போனில் சில நிமிடங்கள் பேசிவிட்டு இருவரும் தொடர்ந்து பேரவைக்குள் சென்றனர். இரு கட்சிகளும் அரசியல் ரீதியாக எதிரெதிர் நிலைப்பாடுகளில் இருக்கும் நிலையில், ஒரே செல்போனை இருவரும் மாற்றி மாற்றிப் பயன்படுத்திய காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இதையும் படிங்க: சட்டமன்றத்தில் ஜெயலலிதா பாணியை கையில் எடுக்கப்போகும் CM விஜய்! சபாநாயகர் பிரபாகர் சுட்டிக்காட்டிய பரபரப்பு பின்னணி... !!!

ஒரே செல்போனில் மாறி மாறி பேசிய எம்.எல்.ஏக்கள்

அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் செல்போனை சேகர்பாபு யாரிடம் பேசுவதற்காக வாங்கினார் என்பது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதனால், அந்த அழைப்பு யாருடையது என்ற கேள்வி அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் எழுந்துள்ளது. குறிப்பாக, அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியிருக்கலாமா என்ற ஊகமும் முன்வைக்கப்படுகிறது.

திமுக - அதிமுக நெருக்கமா? அரசியல் வட்டாரத்தில் விவாதம்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தற்போதைய அரசியல் சூழலில், பேரவைக்குள் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களின் இந்த நெருக்கம் பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக, திமுக - அதிமுக உறுப்பினர்கள் சில விவகாரங்களில் ஒரே நிலைப்பாட்டை எடுக்கிறார்களா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், ஒரு செல்போனை மாற்றி மாற்றிப் பேசியதையே அடிப்படையாக வைத்து இரு கட்சிகளும் கூட்டாக செயல்படுவதாக முடிவு செய்ய முடியாது. பேரவை வளாகத்தில் நடந்த இந்தக் குறுகிய நேர சந்திப்புக்கான காரணம் குறித்தும் சம்பந்தப்பட்ட தரப்பிலிருந்து இதுவரை விளக்கம் எதுவும் வெளியாகவில்லை.

அதிமுக உள்கட்சி சூழலிலும் கவனம்

அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினைகள் மற்றும் சில எம்.எல்.ஏக்கள் தொடர்பான அதிருப்தி நிலவி வருவதாக கூறப்படும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக கருதப்படும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியுடன் சேகர்பாபு பேசிய காட்சியும் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இதனிடையே, அக்ரி கிருஷ்ணமூர்த்தி செல்போனை சேகர்பாபு பயன்படுத்தியதன் பின்னணி என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: அரசியலில் மீண்டும் பரபரப்பு...! திமுக உதவியுடன் திருமாவளவன் முதலமைச்சர்... தவெக- வுடன் ரகசிய உடன்பாடு! தமிழக அரசியலில் அடுத்தடுத்த திருப்பம்...!!!