கொளத்தூர் தொகுதி தேர்தல் வழக்கு... சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு..!!!



kolathur-election-evm-vvpat-case-verdict-reserved

கொளத்தூர் தொகுதி தேர்தல் முடிவை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவிகளில் முறைகேடு நடந்ததாக ஸ்டாலின் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில் இயந்திரங்களில் எந்த முரண்பாடும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் 74,202 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் வி.எஸ்.பாபு 82,997 வாக்குகள் பெற்று 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: 2 நாளில் ஸ்டாலின் வெளியிடப்போகும் முழு லிஸ்ட்...! எந்த மாவட்டத்தில் எந்தெந்த தொகுதி? திமுக காட்டும் அதிரடி அரசியல்...!!!

14 வாக்குச்சாவடிகளில் EVM, VVPAT ஆய்வு

தேர்தல் முடிவுக்குப் பிறகு வாக்குப்பதிவு மற்றும் எண்ணிக்கை நடைமுறைகளில் முறைகேடு நடந்திருக்கலாம் எனக் கூறி, பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மீண்டும் பரிசோதிக்க வேண்டும் என ஸ்டாலின் தரப்பில் நீதிமன்றத்தை நாடப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி, கொளத்தூர் தொகுதியில் 14 வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட EVM மற்றும் VVPAT கருவிகள் ஆய்வு செய்யப்பட்டன.

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் சமீரன் மற்றும் பெல் நிறுவனப் பொறியாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், இயந்திரங்களில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் அவை முறையாக செயல்படுவதாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அறிக்கை அளித்தார். ஆனால், மாதிரி வாக்குப்பதிவின்போது சில VVPAT கருவிகள் செயலிழந்ததாகவும், வேட்பாளர்களின் முகவர்களுக்கான சீல்கள் முறையாக ஒட்டப்படவில்லை என்றும் ஸ்டாலின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

286 EVM-களையும் முழுமையாக சரிபார்க்க கோரிக்கை

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், குறிப்பிட்ட 6 வாக்குச்சாவடிகளில் VVPAT ஒப்புகைச் சீட்டுகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுக்கும் இடையே முரண்பாடுகள் இருந்ததாக கூறப்பட்டது. இதனால், கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட 286 EVM இயந்திரங்கள் மற்றும் VVPAT ஒப்புகைச் சீட்டுகளையும் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் என கோரப்பட்டது.

மேலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவு

வழக்கு விசாரணையின்போது மு.க.ஸ்டாலின் தரப்பு, தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு தரப்பு மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் விரிவான வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை நிறைவு செய்தனர்.

இதையடுத்து, கொளத்தூர் தேர்தல் முடிவை எதிர்த்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வெளியான பிறகே, தேர்தல் முடிவு தொடர்பான அடுத்தகட்ட நிலை தெளிவாகும்.

 

இதையும் படிங்க: சிறு வயதில் தான் தவறு செய்தால் கன்னத்திலே அறைவார்! யோசிக்கவே மாட்டார்! அதே நேரத்தில்... மேடையில் கலங்கிய மு.க.ஸ்டாலின்..!!!