என்ன ஒரு ஸ்பீடு..! 5:10 மணிக்கு கொடுத்த மனு... 4 நிமிஷத்துல SMS.. 5:20க்கே ஒப்புகைச்சீட்டு! அப்டியே அழுதுட்டேன்! தவெக ஆட்சி மாற்றம் குறித்து பெண்ணின் வைரல் பதிவு!!!
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் நிர்வாகத்தில் என்ன மாற்றம் ஏற்படும் என்ற கேள்விக்கு பதிலளிப்பது போல, மாற்றுத்திறனாளிப் பெண் ஒருவர் பகிர்ந்துள்ள அனுபவப் பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. தலைமைச் செயலகத்தில் மனு அளித்த சில நிமிடங்களிலேயே பதிவு செய்யப்பட்டதற்கான குறுஞ்செய்தியும் ஒப்புகைச் சீட்டும் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் அணுகுமுறையும் தன்னை நெகிழச் செய்ததாக அந்தப் பெண் குறிப்பிட்டுள்ளார்.
மனு அளித்த 4 நிமிடங்களில் வந்த SMS
அந்தப் பெண் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், தனது கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க தலைமைச் செயலகத்துக்குச் சென்றதாக தெரிவித்துள்ளார். மாலை 5.10 மணிக்கு மனுவை சமர்ப்பித்த நிலையில், சரியாக 5.14 மணிக்கு மனு பதிவு செய்யப்பட்டதற்கான SMS தனது செல்போனுக்கு வந்ததாக அவர் கூறியுள்ளார். அதன்பின், 5.20 மணிக்குள் மனுவுக்கான ஒப்புகைச் சீட்டும் கையில் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
துறை அதிகாரியை சந்திக்க ஊழியர் வழிகாட்டல்
இதையடுத்து அங்கிருந்த அரசு ஊழியர் ஒருவர், மனுவுக்கான பெறுநர் முகவரியை தெளிவாக எழுதிக் கொடுத்து, சம்பந்தப்பட்ட துறையின் மேலாண்மை இயக்குநரை நேரில் சந்திக்குமாறு அறிவுறுத்தியதாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். மேலும், மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என தவெக தலைவர் உத்தரவிட்டுள்ளதாக அந்த ஊழியர் கூறியதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அந்த வார்த்தைகளைக் கேட்டதும் தான் உணர்ச்சிவசப்பட்டு அழுதுவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவு
மனு அளித்த சில நிமிடங்களிலேயே அடுத்தகட்ட நடவடிக்கைக்கான வழிகாட்டுதல் கிடைத்ததையும், அரசு ஊழியர்களின் கனிவான அணுகுமுறையையும் அந்தப் பெண் தனது பதிவில் பாராட்டியுள்ளார். இதை மாற்றுத்திறனாளிகள் மனு தொடர்பான முக்கியமான அனுபவமாக அவர் பகிர்ந்துள்ளார். தற்போது அந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக தவெக நிர்வாகம் தொடர்பான விவாதங்களிலும் இந்தப் பதிவு கவனம் பெற்றுள்ளது.
TVK ஆட்சியில் அப்படி என்ன மாற்றம் என்று கேட்பவர்களுக்கு பதில்…
இன்று என்னுடைய அனுபவம்…
இன்று முதலமைச்சர் தனி பிரிவில் மனு கொடுக்க தலைமைச் செயலகம்… சென்றிருந்தேன்….
5 :10 க்கு… மனு கொடுத்தேன்… 5.14க்கு… Msg வந்தது…
5 :20 க்கு ஒப்புகைச் சீட்டு கையில… pic.twitter.com/70TO86HHJT— SUMI (@NSSumithra) August 10, 2026
இதையும் படிங்க: BREAKING: வாரி வழங்கிய பதவியால் தவெக- வில் நடக்கும் தள்ளுமுள்ளு! உடனே கூட்டத்தை கூட்டுங்க.... பரபரப்பில் அரசியல் களம்..!!!