99% வாக்குகளை பெற்று வாய்பிளக்க வைத்த வேட்ப்பாளர்.. தேசிய அளவில் ட்ரெண்டிங்.!
மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக இருப்பவர் மறைந்த அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார். கடந்த ஜனவரி 28 இல் பாராமதியில் விமான விபத்து ஒன்றில் அஜித் பவார் மரணம் அடைந்தார்.
அதற்குப்பின் துணை முதல்வராக சுனேத்ரா பவார் பொறுப்பேற்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே, அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். இத்தகைய சூழலில் பாராமதி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிட்டார்.

அவரை எதிர்த்து 22 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் பாராமதி தொகுதியில் மொத்தம் 2,23,707 வாக்குகள் பதிவாகின. இதில் 99 சதவீத வாக்குகளான 2,18,806 வாக்குகளை சுனேத்ரா பவார் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மரணம் சதியா? - பரபரப்பு குற்றசாட்டு.!
அவரை எதிர்த்து போட்டியிட்ட 22 வேட்பாளர்கள் மொத்தமாக சேர்த்து 4901 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர். இது மாநிலத்தைக் கடந்து தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓட்டு கேட்கும்போது ஒருபோதும் நான் விஜய்யை திட்ட மாட்டேன்!! ஏன்னா? சுந்தர் சி சொன்ன காரணம்..