மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டுமென்று அவசியமில்லை; ரஜினி, கமல் குறித்து அறிமுக நடிகை பேட்டி!!

மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டுமென்று அவசியமில்லை; ரஜினி, கமல் குறித்து அறிமுக நடிகை பேட்டி!!


priya-talks-about-rajini-kamal

சமீபத்தில் வெளிவந்து மாபெரும்  வெற்றிபெற்ற திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தில் சிறிய வேடத்தில் நடித்து புகழ் பெற்றவர் பிரியா பவானி ஷங்கர்.

இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல்  காதல் வரை’ சீரியலில் ஹீரோயினாக நடித்தார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். சீரியலையும் விட்டு விலகிய பிரியா, ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

rajinikanth

சமீபத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவித்துள்ள  பிரியா, நாம் எப்போதுமே நடிகர்களிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். அவர்கள் திரையில் பேசும் வசனங்களை அவர்களுடைய நிஜ  வாழ்க்கையோடு ஒப்பிடுகிறோம். 

rajinikanth
 
நாம் எல்லோருக்குமே அரசியலில் தொடர்பு இருக்கிறது. நம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தைப் பார்த்தேலே நாம் பேசுவதுதான் அரசியல் எனப் புரிந்துவிடும். ரஜினி  கமல் அரசியல் பற்றி சொல்வதென்றால், அவர்கள் இருவரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர்கள் இப்போதுதான் கட்சிப் பெயரை அறிவித்திருக்கிறார்கள். அவர்கள் மிகப்பெரிய நடிகர்கள் என்பதால் நம்ப வேண்டுமென்று அவசியமில்லை.

rajinikanth

அரசியல் ஒன்றும் இரண்டரை மணி நேரப் படம் கிடையாது, அவர்கள்  தேர்தலில் ஜெயித்து வெற்றிபெற்று ஐந்து வருடங்கள் ஆட்சி செய்யப்போகிறார்கள். எனவே இந்த விஷயத்தில் நான் ஒரு சாதாரண குடிமகளாக முடிவெடுப்பேன்  எனக் கூறினார்.