#Breaking: முன்னாள் எம்.பி மஸ்தான் உயிரிழந்த விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்; காவல்துறையினர் ரகசிய விசாரணை..!

#Breaking: முன்னாள் எம்.பி மஸ்தான் உயிரிழந்த விவகாரத்தில் பேரதிர்ச்சி திருப்பம்; காவல்துறையினர் ரகசிய விசாரணை..!


Police investigate about masthan dead

 

சென்னை சேப்பாக்கத்தில் வசித்து வரும் முன்னாள் எம்.பி மஸ்தான், திமுகவில் சிறுபான்மையினர் நலபிரிவு செயலாளராக இருந்தார். இவர் கடந்த 22 ம் தேதி திருச்சியை நோக்கி காரில் சென்றபோது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 

chennai

அவரின் மரணம் கூடுவாஞ்சேரி பகுதியில் நடைபெற்ற காரணத்தால், கூடுவாஞ்சேரி காவல் துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து கார் ஓட்டுநர் உட்பட 5 பேரிடம் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பணமோசடி விவகாரத்தில் எம்.பி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.