எப்படி ஒரு தவெக அமைச்சர் பாருங்க....கையை பிடித்து இனிமே இப்படி நடக்காது.! தவறா நினைச்சுக்காதீங்க.... என்ன காரணம் தெரியுமா? அதிமுக எம்.எல்.ஏ-விடம் அமைச்சர் ரமேஷ் வருத்தம் தெரிவித்த வீடியோ..!!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெறவுள்ள முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட விளம்பரப் பேனர்கள் புதிய அரசியல் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. அந்த பேனர்களில் உள்ளூர் அதிமுக எம்எல்ஏ ரவிமனோகரனின் பெயர் இடம்பெறாதது கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் ரமேஷ் கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், எம்எல்ஏவிடம் நேரில் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
பேனர்களில் பெயர் இல்லாததால் சர்ச்சை
உலகப் புகழ்பெற்ற பழனி முருகன் கோயில் பெருந்திட்டப் பணிகள் திறப்பு விழாவுக்காக வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பேனர்களில், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான ரவிமனோகரனின் பெயர் இடம்பெறவில்லை. இது அரசியல் வட்டாரங்களிலும் பக்தர்களிடையிலும் பேசுபொருளாக மாறியது.
தகவலின்படி, நிகழ்வுக்கான விளம்பர ஏற்பாடுகளில் அரசு நடைமுறைகள் முழுமையாக பின்பற்றப்படாததே இந்த சர்ச்சைக்கு காரணமாக கூறப்படுகிறது.
அதிகாரிகளுக்கு அமைச்சர் எச்சரிக்கை
விவரம் தெரியவந்ததும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உடனடியாக தலையிட்டார். அதிமுகவைச் சேர்ந்தவராக இருந்தாலும் ரவிமனோகரன் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி என்பதால், அரசு நிகழ்வுகளில் அவருக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், அரசு மரபுகளை கடைப்பிடிக்கத் தவறிய துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் கடுமையான எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எம்எல்ஏவிடம் நேரில் வருத்தம்
இதையடுத்து அமைச்சர் ரமேஷ், ரவிமனோகரனை நேரில் சந்தித்து பேசினார். ஏற்பட்ட தவறை மனதில் கொள்ள வேண்டாம் என்றும், இனி இதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அரசு விழாக்களில் எதிர்க்கட்சி பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டுகள் எழும் சூழலில், அமைச்சர் ரமேஷின் இந்த அணுகுமுறை அரசியல் வட்டாரங்களில் கவனத்தை பெற்றுள்ளது. அதிகாரிகளுக்கு அவர் வழங்கிய எச்சரிக்கையும், எம்எல்ஏவிடம் நேரில் வருத்தம் தெரிவித்த நடவடிக்கையும் பழனி மட்டுமின்றி தமிழக அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தவறா நெனச்சுக்காதீங்க இனிமே இப்படி நடக்காது..”
பழனி முருகன் கோவில் பெருந்திட்டப் பணிகளின் திறப்பு விழா பேனர்களில் விடுபட்டிருந்த உள்ளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ரவிமனோகரன் பெயர்… திருக்கோவில் அதிகாரிகளை உடனடியாக நேரில் அழைத்து எச்சரித்து எம் எல் ஏ-விடம் வருத்தம்… pic.twitter.com/8XOjnWMpwJ
— Polimer News (@polimernews) June 8, 2026