சசிகலா பூரண குணமடைய வேண்டும்.! ஓபிஎஸ் மகன் வாழ்த்து.!

சசிகலா பூரண குணமடைய வேண்டும்.! ஓபிஎஸ் மகன் வாழ்த்து.!



ops son wish to sasikala for recover from corono

சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற சசிகலா அவர்கள், பெங்களுருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் அவரது தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்படவிருந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா நேற்று விடுதலை ஆனார். விடுதலைக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் தற்போது பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ops son

இந்தநிலையில், பெங்களூருவில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மதிப்பிற்குரிய அம்மையார் திருமதி. சசிகலா நடராஜன் அவர்கள் பூரண குணமடைந்து இனி வரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று அறம் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என் மனதில் தோன்றிய மனிதாபிமானம் சார்ந்த பதிவு என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.