#Breaking: திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டம் - திமுக தலைமை அறிவிப்பு.!



DMK Party Announce MP Meeting Held on 8 June 

 

2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டு 240 தொகுதிகளில் வெற்றி அடைந்துளளன. இந்த வெற்றியால் அவர்களால் மத்திய ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை எனினும், அவர்கள் எதிர்க்கட்சியாக தொடர தீர்மானம் செய்துள்ளனர். 2029 மக்களவை தேர்தலில் அவர்கள் வெற்றி என்ற முனைப்புடன் செயலாற்ற இது பெரிய உந்துசக்தியாக அமைந்துள்ளது. 

திமுக தலைமை அறிவிப்பு

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் வெற்றி அடைந்துள்ள மக்களவை உறுப்பினர்களின் கூட்டம் நாளை மாலை 06:30 மணியளவில் நடைபெறும். அண்ணா அறிவாலயத்தில் இருக்கும் கலைஞர் அரங்கத்தில் வைத்து புதிய எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என்பதால், எம்.பிக்கள் அனைவரும் தலைமை அலுவலகத்திற்கு வர திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: "உலகின் சக்திவாய்ந்த நபர் பிரதமர் நரேந்திர மோடி" - தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பாராட்டு.!

இந்த அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட மூத்த நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தேர்தலில் வெற்றிபெற்ற எம்பிக்கள் மற்றும் அதற்காக உழைத்தவர்களை நேரில் சந்தித்து பாராட்டிய நிலையில், நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மனமுருகி வணங்கிய பிரதமர் நரேந்திர மோடி.!