விஜய் இதை செஞ்சா.. நாங்க வாயே திறக்கலை." திமுக Ex.MLA சவால்.! 



dmk ex mla ezhilan naganadhan about vijays trichy speech

திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசியது பற்றி திமுகவின் முன்னாள் எம்எல்ஏவான எழிலன் நாகநாதன் தற்போது பல்வேறு விமர்சனங்களை வைத்துள்ளார். 

அதில், அவர்,"முதல்வரான பிறகு கூட விஜய் தேர்தல் பரப்புரையில் பேசுவது போல பேசுகிறார். வெறும் ஸ்கிரிப்ட் மட்டும் படித்தால் போதுமா? கொஞ்சம் வரலாற்றை படிக்க விஜய் அண்ணா.?! பொறுப்பு அவரது கையில் இருக்கிறது. மக்கள் அவருக்கு அதிகாரம் கொடுத்துள்ளனர். 

dmk

ஆனால் ஆளும்கட்சி ஆவதற்கு முன்பு தேர்தல் பரப்புரையில் எப்படி அவர் பேசினாரோ? அதே யுக்தியை இப்போதும் கையாளுகிறார். மக்கள் கொடுத்த அதிகாரத்தை வைத்து என்ன செய்யப் போகிறோம்? என்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

இதையும் படிங்க: #Breaking : எடப்பாடியின் ரகசியங்களை உடைத்த சி.வி.சண்முகம்.. பரபரப்பு பேட்டி.!

மக்கள் தெருவில் இறங்கி பல்வேறு விஷயங்களுக்காக போராளி கொண்டு இருக்கிறார்கள். எனவே, தான் நாங்கள் பேச வேண்டியதாக இருக்கிறது. முதல்வர் அதை கண்டு கொண்டால் எங்களுக்கு பேச வேண்டிய அவசியம் இல்லை." என்று தெரிவித்துள்ளார்.