#BREAKING இந்த தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க கூடாது.! ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக தொண்டர்கள்.!

#BREAKING இந்த தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க கூடாது.! ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக தொண்டர்கள்.!



AIADMK volunteers protest


கோவையில் கட்சி அலுவலகம் முன்பு அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

கோவை தொகுதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு ஒதுக்கியதால் அதிமுக தொண்டர்கள் அதிர்ப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்தநிலையில் கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு வழங்குவதைக் கண்டித்து அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தத் தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதைவிட, எத்தனை தொகுதிகளில் வெற்றிபெறுகிறோம் என்பதே பாஜகவுக்கு முக்கியம். இதனால் சென்னை, கோவை, மதுரை போன்ற மாநகரப் பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், ஓசூர் போன்ற பகுதிகளை பாஜக குறி வைத்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு வழங்குவதாக தகவல் வெளியானதையடுத்து, கோவையில் அதிமுக தொண்டர்கள் கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கான சமரச பேச்சுவார்த்தை சென்னை தலைமை அலுவலகத்தில் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.