இபிஎஸ் தலைமையில் கடும் அதிருப்தி! டெபாசிட் காலி.. 100 பேர் தோல்வி! எடப்பாடிக்கு எதிராகத் திரும்பிய மா.செக்கள்! கசிந்த பகீர் தகவல்.!!!



aiadmk-internal-conflict-after-election-defeat

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த கடும் பின்னடைவு, அக்கட்சிக்குள் புதிய அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தது கட்சியின் மூத்த நிர்வாகிகள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதனால் இன்று சென்னையில் நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடர்ந்து தோல்விகள் ஏற்பட்டுவருவது குறித்து பல்வேறு தரப்புகளில் கேள்விகள் எழுந்துள்ளன. அதிகாரப்பூர்வ ஆலோசனைக் கூட்டங்களுக்குப் பிறகு சி.வி. சண்முகம் மற்றும் சி. விஜயபாஸ்கர் தனியாக ஆலோசனை நடத்தியது, கட்சிக்குள் புதிய அணிகள் உருவாகும் சூழலைக் காட்டுவதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: விஜய் போட்ட பிளான் மொத்தமும் நடக்குது.....விஜய்க்கு விஜயபாஸ்கர் திடீர் ஆதரவு! அதிமுக வில் அடுத்தடுத்து 10 க்கு மேல்.....அதிர்ச்சியில் அல்லேலப்படும் எடப்பாடி!!!

‘ஆட்சி பங்கீடு’ கோரிக்கையால் அதிகரிக்கும் அழுத்தம்

கட்சிக்குள் தற்போது அதிகமாக பேசப்படுவது ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறுவது குறித்த விவாதமாகும். ஒரு தரப்பு, பாஜக கூட்டணியில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

அமைச்சரவையில் இடம்பெற்றால்தான் தொண்டர்களை தக்கவைக்கவும், கட்சியை மீண்டும் வலுப்படுத்தவும் முடியும் என்பது அந்த அணியின் கருத்தாக உள்ளது. இதனால் விஜய் தலைமையிலான அரசியல் அமைப்புடன் எதிர்கால ஒத்துழைப்பு குறித்து கட்சிக்குள் தீவிரமாக பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இபிஎஸ் தலைமையை குறிவைக்கும் அதிருப்தி அணி

மற்றொரு தரப்பு, சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கியதே தற்போதைய வீழ்ச்சிக்குக் காரணம் என குற்றஞ்சாட்டத் தயாராகியுள்ளது. இன்று நடைபெறும் கூட்டத்தில் இதுகுறித்து நேரடியாக கேள்விகள் எழுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனுடன், கட்சியில் அதிகாரம் ஒரே இடத்தில் குவியாமல் இருக்க ‘பதவி கால வரம்பு’ முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் பொதுச் செயலாளர் பதவியில் யாரும் நீடிக்கக் கூடாது என்ற யோசனை முன்வைக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யுடன் கூட்டணியா? இன்று முக்கிய ஆலோசனை

அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர், எதிர்கால அரசியல் கணக்கில் விஜய்யுடன் இணைந்து செயல்படுவதில் ஆர்வம் காட்டி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

தவெக தற்போது கூட்டணி ஆதரவுடன் இருந்தாலும், நிலையான ஆட்சிக்காக அதிமுக ஆதரவு எதிர்காலத்தில் தேவைப்படும் என்ற கணிப்பும் கட்சிக்குள் நிலவுகிறது. இதனால் இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி அரசியல், தலைமை மாற்றம், சமரச முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதையும் படிங்க: சி.வி.சண்முகத்தின் தில்லுமுள்ளு வேலை.... எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி! அவசர மீட்டிங்.... அதிர்ச்சியில் அதிமுக!!!