பெண்களே தெரிஞ்சுக்கோங்க... மாதவிடாய் நாட்களில் தண்ணீர் குடிப்பதால் என்ன நடக்கும் தெரியுமா.?
பெண்களாய் பிறந்த அனைவரும் மாதம் மாதம் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினையில் ஒன்று மாதவிடாய். மாதவிடாய் நாட்களில் நிறைய பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு முறைகளை கடைபிடிக்காமல் இருப்பது தான்.
மாதவிடாய் நாட்களில் பெண்கள் சரியான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம். தண்ணீர் குடிக்காமல் இருப்பது தான் வயிற்று வலிக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நீங்கள் குறைந்த அளவு தண்ணீர் குடிக்கும் போது உங்கள் கருப்பையில் இரத்த ஓட்டம் குறைந்து விடுகிறது.

உங்கள் உடலில் தண்ணீர் அளவு எவ்வளவு தேவை என்பது உங்கள் உடலின் தன்மை, உடல் செயல்பாடு மற்றும் பருவத்தைப் பொறுத்தது. எனவே அதற்கு தகுந்தார் போல் சரியான அளவு நார்மல் அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் பருகுவது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது.
உங்கள் சிறுநீரானது மஞ்சள் அல்லது துர்நாற்றத்துடன் வெளியேறினால் அவை தான் நீரிழப்புக்கு அறிகுறியாகும். அதனை அறிந்து சரியான அளவு தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள்.