6 மாத குழந்தையாக இருந்தாலும், தாயின் சேட்டையை எப்படி கண்டுபிடிக்குது பாருங்க!



born baby reaction


தற்போதைய தலைமுறையில் பிறந்த குழந்தைகளும் பயங்கர கூர்மையாக இருக்கின்றனர். ஒரு வயது நிரம்பிய குழந்தைகள் செல்போன்களை எளிதாக பயன்படுத்துகின்றனர். இப்போது உள்ள குழந்தைகள் கேட்கும் கேள்விக்கு முதியவர்களால் பதில் கூறமுடியவில்லை.

 ஒரு வயது குழந்தைகள் பொதுவாக கூர்மையாக காணப்பட்டாலும், பிறந்த குழந்தைக்கும்  அம்மாவுக்குமான உறவு என்பது ஒரு வித்தியாசமான உணர்வாகும். பிறந்த குழந்தைகள் எளிதில் அம்மாவின் நடவடிக்கையை கூர்ந்து கவனிப்பார்கள். அந்த வகையில் ஒரு அம்மா சாப்பாடு பிரியையாக இருக்கின்றார். அவர் குழந்தைக்கு தெரியாமல் சாமர்த்தியமாக சாப்பிடுகின்றார்.

இதனை அறிந்து கொண்ட குழந்தை திரும்பி தாயை பார்க்கின்றது. அப்போது அவர் வாயை சிரிதும் அசைக்காமல் அப்படியே சாப்பிடுகின்றார். அனாலும் குழந்தை அவரை மீண்டும் சாப்பிட்டுவிட்டு மறுபடியும் அவரது தாயின் செயலை கூர்ந்து கவனிக்கிறது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தற்போதைய தலைமுறையில் பிறக்கும் குழந்தைகளின் அறிவுத்திறன் பற்றிய உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள்.