திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர்? அதில் இருக்கும் விஞ்ஞான ரகசியம்!
திருமணத்திற்கு ஏன் பட்டு சேலை அணிகின்றனர்? அதில் இருக்கும் விஞ்ஞான ரகசியம்!
தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மைபொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில்களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று. அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது.
பட்டு துணிகளுக்கும் பட்டிற்கும் இயற்கையாகவே ஒரு குணம் உண்டு. அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளிகளின்சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்றவற்றை தடுத்து உள்ளிருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும்.
திருமணவீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகின்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. எனவே தான் மனப்பென்னிற்கும், மணமகனுக்கும் அரோக்கியமான வாழ்வு வேண்டும் என்பதற்காகவும், தொற்று நோய் பரவக் கூடாது என்பதற்காகவே அணிகின்றனர்.
இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் இதில் வருத்தம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரியவில்லை.
ஆனால் யாரும் இதை தெரிந்து கொள்ளாமல் நாகரீகம் என்ற பெயரில், பட்டுப்புடவையின் அருமை தெரியாமல் சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து கொண்டு கோவிலுக்கு செல்கின்றனர். எனவே இனியாவது கோவிலுக்கோ, அல்லது விழாக்களுக்கோ, அல்லது பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்லும் போது பெண்கள் பட்டுப்புடவை அணிந்து சென்றால் அவர்களின் உடல் நலத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கும்.