உள்ளாடை அணியாமல் வெளியே செல்வது இந்நாட்டு சட்டப்படி குற்றம்.! எந்த நாட்டில் தெரியுமா.?
உள்ளாடை அணியாமல் வெளியே செல்வது இந்நாட்டு சட்டப்படி குற்றம்.! எந்த நாட்டில் தெரியுமா.?
உலகின் பல்வேறு நாடுகளில் பலவிதமான சட்டதிட்டங்கள் கடைபிடிக்கப்பட்டுவருகின்றன. அந்தவகையில் தாய்லாந்து நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவரும் சில சட்டதிட்டங்கள் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.
1 . மன்னர் குடும்பத்தை அவமதிப்பது.
தாய்லாந்து சட்டப்படி அந்நாட்டின் மன்னர் அல்லது அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை பற்றி அவதூறு பேசுவதோ, அவர்களை கலாய்ப்பதோ, அவர்களுக்கு எதிராக நடந்துகொள்வதோ அந்நாட்டு சட்டப்படி குற்றம். இதற்காக 15 வருடங்கள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்பட வாய்ப்புள்ளது.
2 . சட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது.
தாய்லாந்து சட்டப்படி வாகனம் ஓட்டுபவர் சட்டை அணியாமல் வாகனம் ஓட்டுவது அந்நாட்டு சட்டப்படி குற்றம்.
3 . உள்ளாடை அணியாமல் வெளியே செல்வது.
அங்கு கடைபிடிக்கப்படும் வினோதமான சட்டத்தில் இதுவும் ஓன்று. வீட்டில் இருந்து வெளியே செல்லும் நபர்கள் உள்ளாடை அணியாமல் வெளியேறக்கூடாது. உள்ளாடை அணியாமல் வீட்டை விட்டு வெளியேறுவது அந்நாட்டு சட்டப்படி குற்றம்.
4 . பணத்தின் மீது கால் வைப்பது.
அந்நாட்டு பணத்தின் மீது தெரிந்தோ அல்லது தெரியாமலோ காலடி எடுத்து வைப்பது தாய்லாந்து சட்டப்படி பெரும் குற்றம். பணத்தில் இருக்கும் ராஜாவின் உருவத்தின் மீது காலடி படும் என்பதால் இந்த சட்டம் அந்நாட்டில் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.