40 வயதிலும், 20 வயது இளமை தோற்றம்.. இந்த 3 விஷயங்களை செஞ்சா போதும்.!



3 tips to improve our outfit and beauty after 40

எப்போதும் இளமை வேண்டுமா?

நாம் அனைவருமே எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறோம். முப்பதை கடந்து வயதான தோற்றம் ஏற்படும் போது நம் மனதால் அதை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இளமையாக இருக்க செயற்கை அழகு சாதனங்கள் பலவற்றை பயன்படுத்தி தோற்றுப் போவோம். 

ஆனால், அப்படி இருக்காமல் நமது வாழ்க்கை முறையையும் ,உணவு முறையையும் சற்று மாற்றிக் கொண்டாலே 40 வயதில் கூட நாம் இளமையாக இருக்க முடியும். அப்படி எப்போதும் இளமையாக இருக்க கீழ்காணும் விஷயங்களை பின்பற்றினாலே போதும்.

இதையும் படிங்க: தலை முடி ஆரோக்கியத்தை அதிகரிக்க என்ன செய்யலாம்? அசத்தல் டிப்ஸ் இதோ.!

முத்தான மூன்று டிப்ஸ்

3 tips

1) 40 வயதிற்கு பின்னர் கூட சருமம் பளபளப்பாக இருக்க வேண்டுமெனில் ஆல்கஹால், சர்க்கரை மற்றும் நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும். நல்ல கொழுப்பு அடங்கிய உணவுகள் மற்றும் புரதச்சத்து மிக்க உணவுகளை அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

2) தேன் மற்றும் தேங்காய் எண்ணெயை கலந்து முகத்தில் பேக் போல போடுவது சுருக்கங்களை இல்லாமல் ஆக்கும். அன்றாடம் 2லிருந்து 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்து உடலை ஹைட்ரேஷனுடன் வைக்க வேண்டும். 

3) மன அழுத்தம், கவலை உள்ளிட்டவற்றை தூக்கி எறிந்து விட்டு தியானம், யோகா உள்ளிட்டவற்றை செய்தால் நமது உடலும், மனதும் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் நமது தோற்றம் மிகவும் இளமையாக இருக்கும்.

இதையும் படிங்க: 2 நிமிடத்தில், 5 பொருட்களை மட்டும் வைத்து செய்யக்கூடிய பேச்சிலர் குழம்பு.!