திடீரென வெடித்த செல்போன் பேட்டரி.! முகம் சிதைந்து 12 வயது சிறுவன் பரிதாப பலி.!

திடீரென வெடித்த செல்போன் பேட்டரி.! முகம் சிதைந்து 12 வயது சிறுவன் பரிதாப பலி.!



young-boy-killed-when-his-mobile-battery-exploded

மொபைல் பேட்டரி வெடித்து சிதறியதில்12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் 6-ஆம் வகுப்பு படிக்கும் மோனு என்ற 12 வயது சிறுவன் தனது செல்போன் பேட்டரிக்கு சார்ஜ் போட்டுள்ளார். மொபைல் போன் பேட்டரியை மட்டுமே தனியாக சார்ஜ் செய்யும் யூனிவர்ஸல் சார்ஜரை பயன்படுத்தி பேட்டரிக்கு சார்ஜ் செய்துள்ளார். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து அந்த சார்ஜரிலிருந்து பேட்டரியை எடுத்துள்ளார்.

பின்னர் பேட்டரி சார்ஜ் ஆகிவிட்டதா என பார்ப்பதற்காக தனது நாக்கை பேட்டரியில் வைத்து பார்த்துள்ளார். அப்போது திடீரென அந்த பேட்டரி பெரிய சத்தத்துடன் மோனுவின் முகத்திலேயே வெடித்துள்ளது. சத்தம்கேட்டு ஓடிவந்து குடும்பத்தினர் பார்த்தபோது மோனு இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

mobile battery

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், சிறுவன் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மொபைல் பேட்டரி வெடித்து 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.