அட பாவிகளா.... வீடியோவை வைத்து மிரட்டி சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூரர்கள்.!



youg girl abused

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. ஆனாலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை நாள்தோறும் நடந்து வருகிறது. இந்தநிலையில், அசாம் மாநிலத்தில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலம் கவுகாத்தி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை அதேபகுதியை சேர்ந்த 2 பேர் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், அந்த செயலை செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வெளியே யாரிடமாவது கூறினால் விடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என மிரட்டியுள்ளனர்.

இதற்க்கு பயந்த அந்த சிறுமி நடந்த கொடூரம் குறித்து யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அந்த கொடூரர்கள் இருவரும் கடந்த பிப்ரவரி 19-ம் தேதி மீண்டும் அந்த சிறுமியை ஒரு ஓட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனையடுத்து அந்த சிறுமி ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு அந்த 2 பேரும் தனது நண்பர்கள் மேலும் 3 பேருடன் சேர்ந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த கொடூரம் குறித்து அந்த சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமியின் தாய் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கொடூர குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.