நடிகர் அரவிந்த் சாமியின் அப்பா யார் தெரியுமா? பலரும் அறியாத உண்மை!
10 வருஷமா குழந்தை இல்ல! பெண்ணுக்கு பேய் ஓட்டினால் குழந்தை பிறக்கும்! கழிவுநீர் மற்றும் கழிப்பறை நீரால் மந்திரவாதி செய்த அதிர்ச்சி செயல்! பகீர் சம்பவம்....
உத்தரப்பிரதேசம் மாநிலம் அசம்கட் மாவட்டம் கந்தராபூர் பகுதியில், மந்திரவாத சடங்கின் போது 35 வயதான ஆனுராதா என்ற பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், ஆனுராதா தனது தாயுடன் சேர்ந்து அந்த பகுதியில் பிரபலமாக செயல்பட்ட மந்திரவாதி சந்து என்பவரை சந்தித்துள்ளார்.
மந்திர சடங்கின்போது ஆனுராதா மீது பேய் உள்ளதாக கூறிய சந்து மற்றும் அவரது நண்பர்கள் அவளது தலைமுடியை இழுத்து, கழுத்தையும் வாயையும் கடுமையாக அழுத்தி தாக்கியுள்ளனர். மேலும், கழிவுநீர் மற்றும் கழிப்பறை நீர் பலவந்தமாக அருந்த வைக்கப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் புகாரில் தெரிவித்துள்ளனர். ஆனுராதாவின் தாயார் இதற்கு எதிர்ப்பை தெரிவித்தபோதிலும், அந்த குழு அலட்சியமாக நடந்துகொண்டது.
ஆனுராதாவின் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, சந்து மற்றும் அவரது கூட்டாளிகள் அவளை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் இரவு 9 மணிக்கு ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக அறிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சந்து மற்றும் அவரது குழுவினர் மருத்துவமனையை விட்டு தப்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: மாம்பழ விழா! இலவச மாம்பழத்திற்காக குவிந்த மக்கள்! கட்டுப்பாட்டை இழந்து கடைசியில் நடந்த அதிர்ச்சி ! வைரலாகும் வீடியோ..
வழக்குப் பதிவு மற்றும் போலீசார் விசாரணை
ஆனுராதாவின் தந்தை பாலிராம் யாதவ், சந்து ₹1 லட்சம் ஒப்பந்தத்தில் ₹22,000 முன்பணம் பெற்றதாகவும், சடங்கின் பெயரில் தனது மகளை கொலை செய்ததாகவும் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து, உடலை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சந்து போலீசில் சரணடைந்தாலும், அவரது மனைவி மற்றும் மூன்று கூட்டாளிகள் தற்போது தலைமறைவாக உள்ளன.
நகர காவல் கண்காணிப்பாளர் மதுபன் குமார் சிங் தெரிவித்ததாவது, “சந்து மற்றும் மற்றவர்கள் ஆனுராதாவை சடங்கு நடத்தியதாக கூறி கொலை செய்துள்ளனர், வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். சந்து தனது வீட்டில் போலியான ஆன்மிக சூழலை உருவாக்கி, சிறிய கோயில்கள், மணி மற்றும் சிலைகள் வைத்து பொதுமக்களை ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நடந்திருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: புது கார் வாங்கி ஆசையாக வீட்டுக்கு ஓட்டி சென்ற தம்பதி! நொடியில் நடந்த பகீர் சம்பவம்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!